விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ தீபாவளியன்று வெளியாக உள்ளது. அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், நேற்று மாலை சென்னை நேறு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில், படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் லைவாக பாடியதோடு, ஏ.ஆர்.ரஹ்மானும் நிகழ்ச்சியில் பாடினார்.
நிகழ்ச்சியில் அதிரடியாகவும், தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்வது போலவும் பேசிய விஜய், “வாழ்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்கன்னு கேக்குறாங்க. அத விட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். ஆனாலும், அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும் தான். எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சிடும் நண்பா" என்று தெரிவித்தார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...