விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ தீபாவளியன்று வெளியாக உள்ளது. அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், நேற்று மாலை சென்னை நேறு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில், படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் லைவாக பாடியதோடு, ஏ.ஆர்.ரஹ்மானும் நிகழ்ச்சியில் பாடினார்.
நிகழ்ச்சியில் அதிரடியாகவும், தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்வது போலவும் பேசிய விஜய், “வாழ்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்கன்னு கேக்குறாங்க. அத விட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். ஆனாலும், அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும் தான். எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சிடும் நண்பா" என்று தெரிவித்தார்.
திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ்’ (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு...
மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ...
தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது...