ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் நாசரின் மனைவி வேடத்தில் நடித்தவர் லாவண்யா. அப்படத்தை தொடர்ந்து தெனாலி, சேது, கண்ணால் பேசவா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக சீரியலில் பிஸியாக நடித்து வந்தார்.
தற்போது சீரியலுக்கு பிரேக் கொடுத்திருப்பவர், திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
4 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய லாவண்யா, பல டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து வந்த திரைப்படங்களில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர் விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் லாவண்யா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, ”விரைவில் நல்ல செய்தி வரும்” என்று கூறியிருக்கிறார்.
அப்படியானால் லாவண்யாவுக்கு விரைவில் டும்...டும்...டும்...தான்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...