’காலா’வில் செல்வி என்ற ரஜினியின் மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவின் நடிப்பு குறித்து அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அதிலும் ஆரம்ப காட்சியில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நீளமான வசனம் பேசும் காட்சியில் அவர் நடித்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
‘காலா’ படத்திற்குப் பிறகு ஈஸ்வரி ராவ் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று பல பிரபலங்கள் கூறி வரும் நிலையில், தற்போது அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாம்.
இந்த நிலையில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் பாலா இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள ‘வர்மா’ படத்தில் ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
தெலுங்கில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக் தான் இந்த ‘வர்மா’ என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...