Latest News :

ஹீரோயினாக நடிக்க ரெடியான பிரபல இயக்குநரின் மகள்!
Monday August-21 2017

தமிழ் சினிமாவில் வெளியான, தற்போதும் வெளியாகி கொண்டிருக்கும் திகில் படங்களின் வரிசையில் என்றுமே மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த படமாக திகழ்வது ‘யார்’. கலைப்புலி எஸ்.தாணுவின் முதல் தயாரிப்பான இப்படத்தை இயக்கியவர் கண்ணன். ‘யார்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ‘யார்’ கண்ணன், என்ற பெயரில் பல திரைப்படங்களை இயக்கினார்.

 

இயக்குநராக மட்டும் இன்றி நல்ல பாடலாசிரியராகவும் வலம் வந்த இவரது வரிகளில் உருவான “அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா சொல்லித் தந்த பூமி தந்தையல்லவா..” என்ற பாடல் மறக்க முடியாத பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.

 

இயக்குநர், பாடலாசிரியர் என்று சினிமாவில் பயணித்தவர், தற்போது நடிகராகவும் தனது பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருப்பவர் தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்.

 

யார் கண்ணன் - ஜீவா தம்பதியின் வளர்ப்பு மகள் காயத்திரி. இவர் தான் தற்போது ஹீரோயினாக களம் இறங்க தயாராகிவிட்டார். சினிமா விழாக்களில் தனது பெற்றோருடன் கலந்துக் கொண்ட காயத்ரியை, பார்ப்பவர்கள், யார் இவர் நடிகையா? என்று கேட்பார்களாம். இப்படி போகும் இடமெல்லாம் தன்னை நடிகை என்று பலர் நினைப்பதால், நிஜமாகவே நடிகையாக ஆனால் எண்ண!, என்று யோசித்த காயத்ரி, ஹீரோயினாக நடிக்க ரெடியாகிவிட்டார்.

 

அப்பா யார் கண்ணன் இயக்குநர், அம்மா ஜீவா நடன இயக்குநர் என்பதால், நடிப்பு மற்றும் நடனம் தெரிந்த, தமிழ் பேசும் அழகானவராக இருப்பதால் கோடம்பாக்க ஹீரோயின்களின் பட்டியலில் காயத்ரி பெயர் இடம்பெறுவது நிச்சயம்.

 

இருந்தாலும், வாய்ப்பு வந்தால் போதும், என்று இல்லாமல், நல்ல பட நிறுவனம், நல்ல டீம் இருந்தால், மட்டுமே நாளைக்கே மேக்கப் போட தயார் என்று கூறும் காயத்ரி, கோடம்பாக்கத்தில் எண்ட்ரியாகும் போதே தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்துள்ளார்.

 

ஆம், இன்று தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் பல முன்னணி நடிகைகளை புகைப்படம் எடுத்த ஸ்டில்ஸ் ரவியை வைத்தே தனது முதல் போட்டோ சூட்டை நடத்தியுள்ளவர், தான் நடிகையாவது உறுதி என்பதை தனது போட்டோ மூலமாகவே கோடம்பாக்கத்திற்கு புத்திசாலித்தனமாக தெரியப்படுத்தியுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகையாக வரும் காயத்ரியை சினிமாஇன்பாக்ஸ் சார்பில் வெல்கம் பண்ணுவோம்.

Related News

277

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery