ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்றால் அது விஜய் தான். ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் விஜயின் மெர்சல் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘தளபதி 62’ என்று அழைக்கப்படும் இப்படத்திற்குப் பிறகு விஜய் படத்தை இயக்கும் இயக்குநர் யாராக இருப்பார், என்பதிலும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கவுதம் வாசுதேவ் மேனன், விஜயுடன் இணைந்து பணியாற்ற காத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே ‘யோகன் அத்தியாசம் ஒன்று’ என்ற தலைப்பில் விஜயை வைத்து கவுதம் மேனன் ஒரு படத்தை இயக்க இருந்தார். அப்படத்திற்கான போஸ்டர் கூட வெளியான நிலையில், திடீரென்று அப்படம் கைவிடப்பட்டு விட்டது.
தற்போது விஜய்க்காக தான் காத்திருப்பதாக கூறியிருக்கும் கவுதம் வாசுதேவ் மேனன், “"விஜய் சாரோட படம் பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஒருமுறை நான் அவரிடம் கதை சொன்னேன். 'இது வேண்டாம்.. வேற மாதிரி ஏதாவது படம் பண்ணுவோம்' என அவர் கூறினார். அதன் பிறகு மூன்று முறை சந்தித்துள்ளோம். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்குறேன். அப்படி கிடைத்தால் அது லவ் கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும்" என்றும் கூறியுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...