‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி, தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.
ஒரு காலத்தில் சாக்லெட் பாயாக இருந்த இவர், திடீரென்று சினிமாவை விட்டு ஒதுங்கி, தொழில் செய்து வந்த போது, உடல் பருத்து ஆளே மாறிப்போயிருந்தார். ஆனால், தற்போது பழைய அரவிந்த்சாமியாக பிட்டாக இருக்கிறார்.
இந்த நிலையில், தனது உடல் எடை அதிகரித்து தான் குண்டாக இருந்த போது இலங்கையில் தனக்கு ஏற்பட்ட அவமான சம்பவம் ஒன்றைப் பற்றி பேட்டி ஒன்றில் கூறி அரவிந்த்சாமி ரொம்பவே வருத்தப்பட்டார்.
அதாவது, குண்டாக இருந்த போது அரவிந்த்சாமி தனது குழந்தைகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தாராம். அப்போது உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர், அவரது மகளிடம் ”உன் ப்பாவை கொஞ்சமாக சாப்பிட சொல்லு” என்றாராம்.
இந்த சம்பவத்தால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், தனது மகள் சிறியவள், அவளுக்கு எப்படி இருந்திருக்கும், என்று கூறும் அரவிந்த்சாமி, தற்போதும் அந்த சம்பவத்தை மறக்க முடியாது, என்று தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...