‘கபாலி’, ‘காலா’ என்று ரஞ்சித்துடன் தொடர்ந்து இரண்டு படங்களில் பணியாற்றிய ரஜினிகாந்த், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இதற்காக அவர் டார்ஜிலிங்கில் முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரஜினிக்காக எழுதிய கதையில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த படம் விஜயின் 62 வது படம். ஆம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை ரஜினிக்காக முருகதாஸ் உருவாக்கினாராம்.
‘கபாலி’ படப்பிடிப்பில் இருக்கும் போதே முருகதாஸிடம் கதை கேட்ட ரஜினிகாந்த், அந்த கதையை வெகுவாக பாராட்டியதோடு தனது அடுத்தப் படம் இது தான், என்றும் முருகதாஸிடம் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். ஆனால், முருகதாஸ் மகேஷ் பாபுவை வைத்து ‘ஸ்பைடர்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்ததால், அந்த இடைவெளியில் மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘காலா’ வில நடிக்க, முருகதாஸ் ரஜினிக்காக எழுதிய கதையை விஜயை வைத்து எடுக்க முடிவு செய்துவிட்டாராம்.
இப்படி, ரஜினியிடம் இருந்து கைமாறியிருக்கும் இந்த படம், அரசியல் ஆக்ஷன் என்று படும் படு விறுவிறுப்பாக இருப்பதோடு, சமூக பிரச்சினையையும் பேசுவதால் பட்டையை கிளப்பும் என்று கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...