’கபாலி’, ‘காலா’ என்று ரஜினியை வைத்து இரண்டுப் படங்களை இயக்கியிருக்கும் ரஞ்சித்தின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும், எந்த ஹீரோ நடிப்பார் என்பது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘கபாலி’ ரிலிஸின் போதே விஜய்க்காக கதை எழுதுமாறு பிரபல தயாரிப்பாளர் ரஞ்சித்திடம் கூறியிருக்கிறார். அவரும் விஜய்க்காக கதை எழுதிய போது தான். மீண்டும் ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதனால், ரஞ்சித் அடுத்ததாக விஜயை வைத்து படம் இயக்குவார், என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாலிவுட்டில் இயக்குநர் ரஞ்சித்துக்கு மவுசு கூடியிருக்கிறதாம். அங்கிருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் படம் பண்ணி கொடுக்குமாறு ரஞ்சித்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறதாம்.
இது குறித்து ரஞ்சித்திடம் கேட்டதற்கு, “ஆமாம், பாலிவுட் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. அப்படி முடிவானால் நானே அறிவிப்பேன்.” என்று கூறினார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...