தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய், தனது ஆரம்ப காலத்தில் சினிமாவில் பல பிரச்சினைகளை சந்தித்த பிறகே வெற்றி ஹீரோவாக உருவெடுத்தார். அதே சமயம், விஜயை பெரிய ஹீரோ ஒருவருடன் நடிக்க வைத்தால் அவர் மக்களிடம் பிரபலம் ஆவார், என்பதாலேயே விஜயகாந்தை கவுரவ வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க வைத்தார். அப்படத்திற்கு பிறகு விஜய் மக்களுக்கு தெரிந்த நடிகராகிவிட்டார்.
இப்படி தனக்காக உதவி செய்த விஜயகாந்துக்கு நன்றியை வெறும் வார்த்தைகளால் சொன்னால் மட்டும் போதாது என்று கருதும் விஜய், அவரது மகன் சண்முகபாண்டியனை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதிபடி விஜய் தற்போது அறிமுக இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.
விஜயே கதையை கேட்டு வருவதால், பல இயக்குநர்கள் ஆர்வமாக அவரை அனுகினாலும், அவர் கேட்பது சண்முகபாண்டியனுக்காக என்பது தெரிந்ததும் சற்று தயங்குகிறார்களாம்.
எது எப்படியோ விஜய் தயாரிப்பில் விஜயகாந்தின் வாரிசு நடிப்பது உறுதியாகிவிட்டது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...