சுசிகணேசன் இயக்கும் ‘திருட்டுப்பயலே-2’ வில் அமலா பால், பாபி சிம்ஹா, பிரசன்னா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற போது, அமலா பால் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து எஸ்கேப்பாக நினைத்த, தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாபி சிம்ஹாவுடன், அமலா பால் படு நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அமலா பாலின் போனிற்கு மெசஜ் ஒன்று வந்ததாம், அதில் தனது அப்பாவுக்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மெசஜை பார்த்தவுடன், யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து எஸ்கேப்பாக்க முடிவு செய்தார். ஆனால் சுசிகணேசனுக்கு விஷயம் தெரிந்துவிட்டது.
செல்போன் டவர் அங்கு கிடைக்காததால், டவர் கிடைக்கும் இடத்திற்கு சென்று போன் பேசிவிட்டு வருகிறேன், என்று கூறிய அமலா பால், அப்படியே தனது உதவியாளருடன் அங்கிருந்து எஸ்கேப்பாக பிளான் போட்டிருக்கிறார். ஆனால், இதை ஏற்கனவே அறிந்த சுசி, துணைக்கு நானும் வருகிறேன் என்று கூறி அமலா பாலுடன் சென்றிருக்கிறார். பிறகு செல்போன் டவர் கிடைத்த இடம் வந்ததும், அமலா பால் தனது அம்மாவை தொடர்பு கொண்டு பேசிய போது, பல நாட்களாக அமலா பாலை போனில் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், அவரது அம்மா இப்படி ஒரு பொய்யான மெசஜை அனுப்பியது தெரிய வந்துள்ளது.
இதை அறிந்த படக்குழுவினர், பொய்யான மெசஜை நம்பி அமலா பால் சென்றிருந்தால் படப்பிடிப்பு அனைத்தும் நாசமாகியிருக்குமே, என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். நல்ல வேலையாக அமலா பாலுடன் சுசி கணேசன் படகில் பயணித்தது நல்லதா போச்சு என்று கூறி, அனைவரும் பெருமூச்சு விட்டார்களாம்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...