சுசிகணேசன் இயக்கும் ‘திருட்டுப்பயலே-2’ வில் அமலா பால், பாபி சிம்ஹா, பிரசன்னா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற போது, அமலா பால் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து எஸ்கேப்பாக நினைத்த, தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாபி சிம்ஹாவுடன், அமலா பால் படு நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அமலா பாலின் போனிற்கு மெசஜ் ஒன்று வந்ததாம், அதில் தனது அப்பாவுக்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மெசஜை பார்த்தவுடன், யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து எஸ்கேப்பாக்க முடிவு செய்தார். ஆனால் சுசிகணேசனுக்கு விஷயம் தெரிந்துவிட்டது.
செல்போன் டவர் அங்கு கிடைக்காததால், டவர் கிடைக்கும் இடத்திற்கு சென்று போன் பேசிவிட்டு வருகிறேன், என்று கூறிய அமலா பால், அப்படியே தனது உதவியாளருடன் அங்கிருந்து எஸ்கேப்பாக பிளான் போட்டிருக்கிறார். ஆனால், இதை ஏற்கனவே அறிந்த சுசி, துணைக்கு நானும் வருகிறேன் என்று கூறி அமலா பாலுடன் சென்றிருக்கிறார். பிறகு செல்போன் டவர் கிடைத்த இடம் வந்ததும், அமலா பால் தனது அம்மாவை தொடர்பு கொண்டு பேசிய போது, பல நாட்களாக அமலா பாலை போனில் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், அவரது அம்மா இப்படி ஒரு பொய்யான மெசஜை அனுப்பியது தெரிய வந்துள்ளது.
இதை அறிந்த படக்குழுவினர், பொய்யான மெசஜை நம்பி அமலா பால் சென்றிருந்தால் படப்பிடிப்பு அனைத்தும் நாசமாகியிருக்குமே, என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். நல்ல வேலையாக அமலா பாலுடன் சுசி கணேசன் படகில் பயணித்தது நல்லதா போச்சு என்று கூறி, அனைவரும் பெருமூச்சு விட்டார்களாம்.
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...