Latest News :

நடிகை கஸ்தூரி மீது போலீசில் புகார்!
Saturday June-16 2018

பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ட்விட்டரில் கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை கஸ்தூரி, தமிழக அரசியல் தொடர்பாகவும், அரசியல்வாதிகள் பற்றியும் விமர்சித்து வருகிறார். அப்படி அவர் சமீபத்திய நிகழ்வு ஒன்று குறித்து விமர்சித்ததற்கு அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் அதிமுக எம்.எல்.ஏ-க்களில், தினகரன் அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக 14-ந் தேதி தீர்ப்பு வெளியானது. 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

 

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர் வாதத்திடம் திராவிடர் விடுதலைக்கழக மதுரை மாவட்டச் செயலாளர் மணியழகன் புகார் மனு அளித்தார். அதில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும், திரு நங்கைகளை அவமதித்தும் கருத்துகளை வெளியிட்ட நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related News

2828

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery