Latest News :

நடிகை அமலா பால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸ் முடிவு!
Monday June-18 2018

போலியான பாண்டிச்சேரி முகவரியை கொடுத்து சொகுசு கார் வாங்கிய நடிகை அமலா பால், மீது குற்றம் சாட்டிய கேரல குற்றப்பிரிவு போலீஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நேரில் ஆஜரான நடிகை அமலா பால், கேரள படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள வாடகைக்கு வீடு எடுத்திருப்பதாகவும், அந்த விலாசத்தை வைத்தே பாண்டிச்சேரி பதிவில் சொகுசு கார் வாங்கியதாகவும் கூறினார்.

 

ஆனால், அமலா பால் தாக்கல் செய்த விபரங்கள் அனைத்தும் போலியானவை என்பதை கண்டுபிடித்த போலிஸார், அமலா பாலை கைது செய்து உடனடியாக ரிலீஸ் செய்தனர். இதற்கிடையே, தனக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, அமலா பால் சென்னை தி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தால் அவரது சொகுசு கார் விவகாரம் காணாமல் போய்விட்டது.

 

இந்த நிலையில், சொகுசு கார் வாங்கிய வழக்கு தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக அமலாபால் உள்பட 3 பேர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளார்களாம்.

Related News

2840

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியான ‘உஃப் யே சியாபா’!
Friday September-05 2025

லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குநர்  ஜி...

இன்னும் 25 வருடங்களில் அரிசி இருக்காது - அதிர்ச்சியளித்த ‘நாகரீகப் பயணம்’ பட தயாரிப்பாளர்
Friday September-05 2025

ரிச் மூவிஸ் மற்றும் டி.எஸ்.கே மூவிஸ் சார்பில், தாஸ் சடைக்காரன், பி...

Recent Gallery