சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு கொடுக்கப்படும் செக்ஸ் தொல்லைகள் குறித்து பல நடிகைகள் பேசி வருகிறார்கள். தற்போது நடிகைகளை பேட்டி எடுக்கும் பல ஊடகங்கள் அவர்களிடம், சினிமாவில் செக்ஸ் தொல்லை, பற்றிய கேள்வியை மறக்காமல் கேட்டு விட, அவர்களும் அது பற்றி எந்தவித தயக்கமும் இன்றி பேசுகிறார்கள்.
அப்படி எந்தவித அச்சமும் இன்றி பேசும் நடிகைகளில் ஒருவர் தான் ராதிகா ஆப்தே. இவர் சமீபத்தில் தென்னிந்திய பிரபல நடிகர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், இந்தி சினிமாவில் தனக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லைகள் குறித்தும் ஆப்தே பல பேட்டிகளில் பேசியிருந்தார்.
இவர் பேசுவது தான் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றால், இவர் நடித்த சில படங்களில் அதைவித சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சில படங்களில் அதிகமான ஆபாசக் காட்சிகளிலும் இவர் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், தான் ஆபாசமான காட்சிக் கொண்ட படங்களில் நடித்தது எதனால் என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ராதிகா ஆப்தே, “நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சினிமா துறைக்கு வந்தபோது எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூடாது என்று நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

என் பிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லா கதைகளுக்கும் ஒப்புக்கொள்ளாமல் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...