Latest News :

பணத்திற்காகவே அப்படிப்பட்ட படங்களில் நடித்தேன்! - பிரபல நடிகை ஓபன் டாக்
Wednesday June-20 2018

சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு கொடுக்கப்படும் செக்ஸ் தொல்லைகள் குறித்து பல நடிகைகள் பேசி வருகிறார்கள். தற்போது நடிகைகளை பேட்டி எடுக்கும் பல ஊடகங்கள் அவர்களிடம்,  சினிமாவில் செக்ஸ் தொல்லை, பற்றிய கேள்வியை மறக்காமல் கேட்டு விட, அவர்களும் அது பற்றி எந்தவித தயக்கமும் இன்றி பேசுகிறார்கள்.

 

அப்படி எந்தவித அச்சமும் இன்றி பேசும் நடிகைகளில் ஒருவர் தான் ராதிகா ஆப்தே. இவர் சமீபத்தில் தென்னிந்திய பிரபல நடிகர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், இந்தி சினிமாவில் தனக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லைகள் குறித்தும் ஆப்தே பல பேட்டிகளில் பேசியிருந்தார்.

 

இவர் பேசுவது தான் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றால், இவர் நடித்த சில படங்களில் அதைவித சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சில படங்களில் அதிகமான ஆபாசக் காட்சிகளிலும் இவர் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

 

இந்த நிலையில், தான் ஆபாசமான காட்சிக் கொண்ட படங்களில் நடித்தது எதனால் என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ராதிகா ஆப்தே, “நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சினிமா துறைக்கு வந்தபோது எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூடாது என்று நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

 

RadhikaApthey

 

என் பிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லா கதைகளுக்கும் ஒப்புக்கொள்ளாமல் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

2849

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியான ‘உஃப் யே சியாபா’!
Friday September-05 2025

லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குநர்  ஜி...

இன்னும் 25 வருடங்களில் அரிசி இருக்காது - அதிர்ச்சியளித்த ‘நாகரீகப் பயணம்’ பட தயாரிப்பாளர்
Friday September-05 2025

ரிச் மூவிஸ் மற்றும் டி.எஸ்.கே மூவிஸ் சார்பில், தாஸ் சடைக்காரன், பி...

Recent Gallery