‘காலா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதில் ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி ஆகியோர் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 10 நாட்களாக குர்சியாங் என்ற இடத்தில் உள்ள அலிதா தனியார் விடுதியில் ரஜினிகாந்த் தங்கியிருந்தார். அந்த விடுதியில் உள்ள ‘டைரக்டர்ஸ் பங்களா’ என்று அழைக்கப்படும் தனி இல்லத்தில் அவர் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், ரஜினி தங்கியிருந்தால், அவர் நினைவாக அந்த இல்லத்தின் பெயரை ‘ரஜினிகாந்த் வில்லா 3’ என்று விடுதியின் உரிமையாளரான பெயரை மாற்றியுள்ளார். மேலும், அதே பகுதியில் ரஜினிகாந்த் டீ அருந்திய டீ கடை ஒன்றின் பெயரை ‘தலைவா ஸ்பெஷல்’ என்றும் மாற்றியுள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...