தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடுக்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், சீரியல் நடிகை நிலானி, போலீஸ் உடையை அணிந்துக்கொண்டு, தூத்துக்குடி சம்பவம் குரித்து பேசியதோடு, காவல் துறையை கடுமையாக விமர்சித்து பேசினார்.
படப்பிடிப்புக்காக போலீஸ் உடையை அணிந்துக் கொண்டிருந்த அவர், ”போலீஸ் உடையை அணியவே உடம்பு கூசுவதாக” தெரிவித்திருந்தார். வாட்ஸ்-அப்பில் வெளியான அவரது வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு, நிலானியும் பிரபலமானார்.
இந்த நிலையில், குன்னூரில் வைத்து நிலானியை கைது செய்த போலீஸார், குன்னூர் மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்ற் காலை சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பிறகு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நிலானியை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...