Latest News :

படம் தயாரிப்பு என்பது பெரிய போராட்டம் - வருத்தப்படும் அதர்வா
Saturday June-23 2018

நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அதர்வா, ‘செம போத ஆகாதே’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார். வரும் ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

 

இதில் கலந்துக்கொண்ட அதர்வா, பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, திரைப்படம் தயாரிப்பு என்பது மிகப்பெரிய போராட்டம், என்று கூறி வருத்தப்பட்டார்.

 

தொடர்ந்து பேசிய அவர், ”பட விழாக்களில் பல தயாரிப்பாளர்கள் தங்கள் கஷ்டங்களை சொல்வதை கேட்டு இருக்கிறேன். அப்போதெல்லாம் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று நான் நினைத்தது உண்டு. ஆனால் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.

 

படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்த படத்தை ஏற்கனவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு மற்றவர்களுக்கு உதவ கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. அதற்காக வருத்தப்படவில்லை. இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ஜாலியான படமாக இதை எடுத்துள்ளார். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

 

நீண்ட நாட்களாக சீரியஸ் படங்களில் நடித்தேன். இப்போது பொழுதுபோக்கு அம்சம் உள்ள படத்தில் நடித்துள்ளேன். நல்ல படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது. இந்த படம் மது பழக்கத்தை ஊக்குவிக்கவில்லை. போதையில் ஒருவன் முட்டாள் தனமான வேலை செய்கிறான். அதனால் வரும் பிரச்சினைகள் என்ன என்பது தான் கதை.” என்றார்.

 

மேலும், எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, “எனக்கு இன்னும் கல்யாண வயதே வரவில்லையே!” என்று கூறி நைசாவுகா நழுவிவிட்டார்.

Related News

2864

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியான ‘உஃப் யே சியாபா’!
Friday September-05 2025

லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குநர்  ஜி...

இன்னும் 25 வருடங்களில் அரிசி இருக்காது - அதிர்ச்சியளித்த ‘நாகரீகப் பயணம்’ பட தயாரிப்பாளர்
Friday September-05 2025

ரிச் மூவிஸ் மற்றும் டி.எஸ்.கே மூவிஸ் சார்பில், தாஸ் சடைக்காரன், பி...

Recent Gallery