முன்னணி நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் வாங்குவது ஒரு பக்கம் இருக்க, முன்னாள் கதாநாயகிகளான தற்போதைய சீனியர் நடிகைகளில் சிலர் பெரும் தொகையை சம்பளமாக கேட்டு தயாரிப்பாளர்களை தெரிக்க விடுகிறார்களாம்.
’பாகுபலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன், தனது சம்பளத்தை கோடியில் தான் தொடங்குகிறாராம். அதனால் அவர் வீட்டு பக்கம் செல்லவே தயாரிப்பாளர்கள் யோசிக்க, தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகை ஒருவருக்கு வெறும் 4 காட்சிகளில் நடிப்பதற்கு மட்டுமே ரூ.40 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பது அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
ஆம், பெல்லகொண்டா ஸ்ரீனிவாஸ் - ராகுல் பிரீத் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜெய ஜானகி நாயகா’ என்ற படத்தில் நடிகை ஆணி விஸ்வநாத் முக்கிய கதாபார்த்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் மொத்தமே 4 காட்சிகளில் மட்டுமே அவர் வருகிறாராம். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.40 லட்சமாம்.
இந்த தகவலை படத்தின் இயக்குநர் பொய்யப்பட்டி சீனு தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கேத்ரின் தெரசாவுக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...