Latest News :

ஜெயலலிதாவுக்கு கவிதை, கமலுக்கு பாட்டு! - சினேகனின் புது ரூட்டு
Sunday June-24 2018

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, “எங்கம்மா....நீ...எங்கம்மா..” என்று கேட்கும் வகையில் கவிதை ஒன்று எழுதிய பாடலாசிரியரும் கவிஞருமான சினேகன், தற்போது கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கான பாடல்களை எழுதியுள்ளார்.

 

கமல்ஹாசன் தொடங்கியுள்ள ‘மக்கள் நீதி மய்யம்’ அரசியல் கட்சியில் நடிகர் நடிகைகள் பலர் இணைந்து வருகிறார்கள். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாடலாசிரியர் சினேகனும் கமல் கட்சியில் இணைந்துவிட்டார்.

 

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக ‘இது நம்மவர் படை’ என்ற தலைப்பில் சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். இதற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார்.

 

இந்த பாடல்களின் வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொடண்டகள் கலந்துக்கொள்ளும் இவ்விழாவில் அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பாடல்களை வெளியிடுகிறார்.

Related News

2871

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery