தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் 2018 - 2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் தலைவராக விஜயமுரளி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பெருதுளசி பழனிவேலும், பொருளாளாராக யுவராஜும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
துணைத் தலைவர்களாக கோவிந்தராஜ் மற்றும் ராமானுஜம் வெற்றி பெற்றுள்ளார்கள். இணைச் செயலாளர்களாக குமரசேன் மற்றும் ஆனந்த் வெற்றி பெற்றனர்.
வி.பி.மணி, கிளாமர் சத்யா, மதுரை செல்வம், நிகில் முருகன், சரவணன், சாவித்திரி, ஆறுமுகம், சங்கர், செல்வகுமார் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
யூனியன் தேர்தலை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கிரிதரன் நடத்தி கொடுத்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சினிமா பி.ஆர்.ஓ யூனியனுக்கு சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...