Latest News :

பள்ளிக்கு பூட்டு போட்டவர் மீது வழக்கு போட்ட ரஜினிகாந்த் மகள்
Tuesday August-22 2017

சென்னை கிண்டியில் ரஜினிகாந்தின் மனைவி லதா, ஆஷ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். 

 

இந்த பள்ளிக்கூடம் இயங்கி வரும் கட்டிடத்திற்கு பல ஆண்டுகளாக வாடகை தரவில்லை என்று கூறி, பள்ளிக்கூட கட்டிடத்திற்கு அதன் உரிமையாளர் வெங்கடேஷ்வரலு பூட்டு போட்டு பூட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஆனால், பள்ளி நிர்வாகம் சார்பில் அளித்த விளக்கத்தில், கட்டிட உரிமையாளரின் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சினை காரணமாக இத்தகைய நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், ஒழுங்காக வாடகை கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், பள்ளிக்கு பூட்டு போட்டவரிடம் இழப்பீடு கேட்டு ரஜினிகாந்தின் மூத்த மகளும், ஆஷ்ரம் பள்லியின் செயலாளருமான ஐஸ்வர்யா தனுஷ், வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

ஆஷ்ரம் பள்ளி கட்டிடத்துக்கு பூட்டு போட்ட அதன் உரிமையாளரின் நடவடிக்கையினால், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த உரிமையாளரிடம் இருந்து ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் மற்றும் பூட்டை அகற்ற உத்தரவிட வேண்டும், என்று ஐஸ்வர்யா தனுஷ் தொடர்ந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும், என்ற ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கை இன்று விசாரிக்கிறார்.

Related News

288

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery