செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வரும் சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘சூர்யா 37’ என்று அழைக்கின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சாயீஷா நடிக்கிறார். முக்கிய மோகன் லால், அல்லு சிரிஷ், இயக்குநர் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க, கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் பூஜையுடன் தொடங்கியது. இதில் சூர்யா, சாயிஷா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
பயணம் சம்மந்தமான கதையை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பிரேசில், மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...