Latest News :

நடிகர் சங்கத்தின் இடத்தை விற்று பணம் கையாடல் - சரத்குமார், ராதாரவி மீது வழக்கு பதிவு
Thursday June-28 2018

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதாரவி ஆகியோர் மீது சங்கத்தின் நிலத்தை விற்று பணம் கையாடல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தற்போதைய நடிகர்கள் சங்க தலைவர் நாசர் தலைமையிலான நிர்வாகிகள் குழு, முன்னாள் நிர்வாகிகள் குழு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 செண்ட் நிலம் முறைகேடாக விற்கப்பட்ட விவகாரமும் ஒன்று. கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், நிலம் விற்கப்பட்ட தொகை குறித்து ஆவணங்கள் ஏதும் இல்லை. 

 

இதுகுறித்து சரத்குமார் மற்றும் ராதாரவி மீது, நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் பணம் கையாடல் புகார் அளித்திருந்தார். ஆனால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை விஷால் நாடினார்.

 

அதில் நிலம் முறைகேடாக விற்ற புகாரில் முகாந்திரம் இருந்தால், சரத்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என்று கூறி நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. 

 

இந்த சூழலில் சரத்குமார், ராதா ரவி உள்ளிட்ட 4 பேர் மீது, 4 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

Related News

2901

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery