மணிரத்னத்தின் ‘ரோஜா’, ஷங்கரின் ‘ஜெண்டில் மேன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த மது பாலா, பிறகு இந்தியில் சில படங்களில் நடித்தார். பிறகு திருமணம் செய்துக்கொண்டு மும்பையில் செட்டிலானவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், பாபி சிம்ஹா நடிக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் மூலம் மது பாலா மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியிருக்கிறார். இந்த தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தாலும், தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘சென்னையில் ஒருநாள் 2’ படத்தை இயக்கிய ஜே.பி.ஆர் மற்றும் அறிமுக இயக்குநர் சாம் சூர்யா ஆகியோர் இயக்கும் இப்படத்தில் மது பாலா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...