தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் போட்டியாளர்கள் ஆரவ், ஓவியா ஆகியோரது காதல் தான் நிகழ்ச்சியை பரபரப்பாக்கியது. அந்த காதலால் ஏற்பட்ட மோதல், அதனால் பாதிக்கப்பட்ட ஓவியா, மன நிலை பாதிக்கப்பட்டவரை போல நடந்துக் கொண்டது என முழு நிகழ்ச்சியும் பெரும் பரபரப்போடு ஒளிபரப்பானது.
இந்த நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாம் சீசனிலும் ஒரு காதல் காவியம் உருவாகியுள்ளது. அதாவது, போட்டியாளர் மஹத் காதல் தோல்வி பாடல் ஒன்றை பாடியபடி, தனது முதல் காதல் அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார்.
உடனே, அவர் அருகில் இருக்கும் யஷிகா ஆனந்தும் தேம்பி தேம்பி அழுவதோடு, அவரும் தனது முதல் காதல் குறித்து பேச இருப்பது போல புரோமோவில் காட்டப்படுகிறது. இதனால், இரண்டாம் சீசனிலும் ஆரவ் - ஓவியா காதல் காவியத்தைப் போல, மஹத் - யஷிகா ஆனந்த் காதல் காவியம் உருவகாலாம் என்று எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெம்பிரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”...
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S...
தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்து, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு உதவி செய்ததால், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது...