ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று இயக்குநர்கள் பலர் விரும்பினாலும், ரஜினிகாந்த் யாருடன் பணியாற்ற விரும்புகிறாரோ அவர்களுக்குத் தான் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த நிலையில், தனது ஒவ்வொரு படத்தின் ரிலிசிற்கு முன்பாகவோ, அல்லது ரிலிஸ் ஆன பிறகோ, “ரஜினிகாந்துக்கான கதை என்னிடம் இருக்கிறது, அவர் ஒகே சொன்னால் அவரை இயக்க நான் ரெடி” என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறி வருவது வழக்கமாகிவிட்டது.
முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்’ தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் தனது ரஜினிகாந்த் ஆசை குறித்து முருகதாஸ் பேட்டியளித்துள்ளார். அதில், நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதால், அவருக்கு கதை எழுதிவதில் பெரிய சிரமம் இருக்காது. ஒரு மாதத்தில் அவருக்கான நல்ல கதையை நான் எழுதிவிடுவேன். தற்போது என்னிடம் ரஜினிக்கான கதை இருக்கிறது. அவர் சம்மதித்தால் போதும்., என்று தெரிவித்துள்ளார்.
இப்படி ரஜினிகாந்த் படத்தை இயக்குவதற்காக, தன்னை தீவிர ரசிகன் என்று கூறி தொடர்ந்து பிட்டு போட்டு வரும் முருகதாஸுக்கு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா, என்பது வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தான் தெரிய வரும்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...