பிரபல சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட பல மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்ல்களை பாடியிருப்பதோடு, பல்வேறு விருதுகளையும், 4 முறை தெசிய விருதும் வாங்கியிருக்கிறார். தற்போது 80 வயதாகும், அவர் தனது மகனுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, பாடகி ஜானகியின் உடல் நிலை குறித்தும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அவ்வபோது வதந்திகள் பரவி வருகிறது. பல முறை இதுபோன்ற வதந்திகள் பரவி வரும் நிலையில், கடந்த வாரத்தில் கூட இதுபோன்ற வதந்தி ஒன்று வைரலானது.
இந்த நிலையில், பாடகி ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள இசையமைப்பாளர்கள் சங்கம் கேரள காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறது. இதையடுத்து, கேரள காவல் துறை ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பும் நபரை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி, சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து, கேரள சைபர் க்ரைம் போலீசார், இந்த வழக்கில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால், பாடகி ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்புபவர் விரைவில் சிக்குவார் என தெரிகிறது.
ஜெம்பிரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”...
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S...
தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்து, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு உதவி செய்ததால், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது...