விஷாலை வைத்து ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கிய மிஷ்கின், அடுத்ததாக சாந்தனுவை வைத்து படம் இயக்க இருந்தார். இது குறித்து அறிவிப்பும் வெளியிட்ட நிலையில், படத்தை தயாரிக்க இருந்த நிறுவனம் திடீரென்று பின் வாங்கியது. இதனால், சாந்தனு - மிஷ்கின் கூட்டணி சேராமல் போய்விட்டது.
இந்த நிலையில், சாந்தனு நடிக்க இருந்த கதையை உதயநிதியை வைத்து மிஷ்கின் எடுக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கான அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் நடிப்பதோடு, தனது சொந்த நிறுவனத்தின் மூலம் உதயநிதி தயாரிக்கவும் செய்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...