அரசியலில் ஈடுபடுவது குறித்து சமீபத்தில் தனது ரசிகர்கள் முன்னிலை ரஜினிகாந்த் சூசகமாக தெரிவித்ததை தொடர்ந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும், ‘2.0’, ‘காலா’ என்று மறுபுறம் ரஜினிகாந்த் நடிப்பிலும் தீவிரம் காட்டி வருவதால், அவரது அரசியல் பேச்சு வழக்கமான ஒன்று தான், என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையே, முன்னணி ஊடகத்தின் மூத்த அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரை ரஜினிகாந்த் சந்தித்து தனது அரசியல் எண்ட்ரி குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. மேலும், ரஜினிகாந்த் நண்பர்கள் சிலர், அவர் அரசியலில் ஈடுபடுவது உறுதி என்று அவ்வபோது பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் திருச்சியில் சில நாட்களுக்கு முன்பாக நடத்திய கூட்டமே, ரஜினியின் அரசியல் ஒத்திகை தான் என்றும், அதில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் தனது படப்பிட்ப்பு வேலைகளை முடித்துவிட்டு, தீவிர அரசியல் பணியில் ரஜினிகாந்த் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வரும் ரஜினிகாந்த், கட்சியின் கொடியை ரெடி பண்ணிவிட்டதாக கூறப்படுகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...