பாலிவுட்டின் பிரபல நடிகையான வித்யா பாலன், தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்கள் தான். அந்த வகையில், மீண்டும் தென்னிந்திய சினிமாவில் வித்யா பாலன் நடிக்க இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக இருக்கிறது.
‘என்.டி.ஆர் பயோபிக்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை, பிரபல நடிகரும், என்.டி.ஆர்-ன் மூத்த மகனுமான நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரித்து, என்.டி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், என்.டி.ராமராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யாபாலன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிப்பதால், இப்படத்தின் மீது இருந்த எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
கிரிஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன், சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...