Latest News :

மீண்டும் கிரிக்கெட் சம்மந்தமான படம் எடுக்கும் வெங்கட் பிரபு!
Wednesday July-04 2018

‘பார்ட்டி’ படத்தை முடித்திருக்கும் வெங்கட் பிரபு, தற்போது அப்படத்தின் பின்னணி வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

 

இந்த நிலையில், சிம்பு படம் முடிந்த பிறகு கிரிக்கெட் சம்மந்தமான படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க போகிறாராம். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்காக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை சந்தித்து பேசியிருக்கும் வெங்கட் பிரபு, இப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

உலக அளவில் சுழற்பந்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் முத்தையா முரளிதரன், கிரிக்கெட் வாழ்க்கையில் பல சோதனைகளையும், அவமானங்களையும் சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

2956

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery