‘பார்ட்டி’ படத்தை முடித்திருக்கும் வெங்கட் பிரபு, தற்போது அப்படத்தின் பின்னணி வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இந்த நிலையில், சிம்பு படம் முடிந்த பிறகு கிரிக்கெட் சம்மந்தமான படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க போகிறாராம். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை சந்தித்து பேசியிருக்கும் வெங்கட் பிரபு, இப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலக அளவில் சுழற்பந்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் முத்தையா முரளிதரன், கிரிக்கெட் வாழ்க்கையில் பல சோதனைகளையும், அவமானங்களையும் சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...