‘பார்ட்டி’ படத்தை முடித்திருக்கும் வெங்கட் பிரபு, தற்போது அப்படத்தின் பின்னணி வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இந்த நிலையில், சிம்பு படம் முடிந்த பிறகு கிரிக்கெட் சம்மந்தமான படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க போகிறாராம். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை சந்தித்து பேசியிருக்கும் வெங்கட் பிரபு, இப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலக அளவில் சுழற்பந்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் முத்தையா முரளிதரன், கிரிக்கெட் வாழ்க்கையில் பல சோதனைகளையும், அவமானங்களையும் சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...