கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைதாகியுள்ள மலையாள நடிகை சூர்யாவுக்கு போலி சாமியாருடன் தொடர்பு இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து தனி படை அமைத்த கேரள காவல் துறை, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது பிடிபட்ட இருவரிடம் விசாரிக்கையில், நடிகை ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிரபல மலையாள டிவி நடிகையான சூர்யாவின் வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, அவர் தனது வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சூர்யா மற்றும் அவரது தாய், தங்கை ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
சிறையில் இருக்கும் நடிகை சூர்யாவிடம், இதன் பின்னணி இருப்பவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சூர்யாவுக்கு பின்னணியில், போலி சாமியார் ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...