கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைதாகியுள்ள மலையாள நடிகை சூர்யாவுக்கு போலி சாமியாருடன் தொடர்பு இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து தனி படை அமைத்த கேரள காவல் துறை, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது பிடிபட்ட இருவரிடம் விசாரிக்கையில், நடிகை ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிரபல மலையாள டிவி நடிகையான சூர்யாவின் வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, அவர் தனது வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சூர்யா மற்றும் அவரது தாய், தங்கை ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
சிறையில் இருக்கும் நடிகை சூர்யாவிடம், இதன் பின்னணி இருப்பவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சூர்யாவுக்கு பின்னணியில், போலி சாமியார் ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...