கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைதாகியுள்ள மலையாள நடிகை சூர்யாவுக்கு போலி சாமியாருடன் தொடர்பு இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து தனி படை அமைத்த கேரள காவல் துறை, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது பிடிபட்ட இருவரிடம் விசாரிக்கையில், நடிகை ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிரபல மலையாள டிவி நடிகையான சூர்யாவின் வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, அவர் தனது வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சூர்யா மற்றும் அவரது தாய், தங்கை ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
சிறையில் இருக்கும் நடிகை சூர்யாவிடம், இதன் பின்னணி இருப்பவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சூர்யாவுக்கு பின்னணியில், போலி சாமியார் ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...