நயந்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அறம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இப்படத்தின் வெற்றி மூலம் நயந்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
இப்படத்தை இயக்கிய கோபி நயினாரின் அடுத்தப் படம் எந்த மாதிரியான படமாக இருக்கும் என்று பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அவர் ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதை மறுத்த இயக்குநர் கோபி நயினார், அறம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயார் செய்துவிட்டேன், ஆனால் எனது அடுத்த படமாக அது இருக்காது, வேறு ஒரு கதையை எடுத்த பிறகே அறம் இரண்டாம் பாகத்தை எடுப்பேன், என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், வட சென்னையையும், அங்கு இருந்த பிரபல பாக்ஸர்களின் வாழ்வியலையும் தனது அடுத்தப் படமாக கோபி நயினார் எடுக்க இருக்கிறாராம். இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படம் தனது கதை என்று கோபி நயினார் கூறியிருந்தார். மேலும், மெட்ராஸ் படத்திற்குப் பிறகு ரஞ்சித் சூர்யாவை வைத்து இயக்க இருந்த படமும் பாக்ஸிங் பற்றிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன்...
காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, ’அங்காடித்தெரு’ மகேஷ், ’திருக்குறள்’ குணாபாபு நடிப்பில், 1990-களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தடை அதை உடை’...
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'...