Latest News :

பாக்ஸிங் பற்றிய படம் எடுக்கும் ‘அறம்’ இயக்குநர்! - ஹீரோ யார் தெரியுமா?
Monday July-09 2018

நயந்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அறம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இப்படத்தின் வெற்றி மூலம் நயந்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

 

இப்படத்தை இயக்கிய கோபி நயினாரின் அடுத்தப் படம் எந்த மாதிரியான படமாக இருக்கும் என்று பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அவர் ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதை மறுத்த இயக்குநர் கோபி நயினார், அறம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயார் செய்துவிட்டேன், ஆனால் எனது அடுத்த படமாக அது இருக்காது, வேறு ஒரு கதையை எடுத்த பிறகே அறம் இரண்டாம் பாகத்தை எடுப்பேன், என்று கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், வட சென்னையையும், அங்கு இருந்த பிரபல பாக்ஸர்களின் வாழ்வியலையும் தனது அடுத்தப் படமாக கோபி நயினார் எடுக்க இருக்கிறாராம். இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படம் தனது கதை என்று கோபி நயினார் கூறியிருந்தார். மேலும், மெட்ராஸ் படத்திற்குப் பிறகு ரஞ்சித் சூர்யாவை வைத்து இயக்க இருந்த படமும் பாக்ஸிங் பற்றிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

2996

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவி! - ரூ.1 லட்சம் வழங்கிய பிடி செல்வகுமார்!
Thursday December-11 2025

சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...

Recent Gallery