Latest News :

இயக்குநர் செக்ஸ் டார்ச்சர்! - சீரியல் நடிகை கதறல்
Tuesday July-10 2018

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று அனைத்து மொழி சினிமாக்களிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக நடிகைகள் பலர் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அதே சமயம் பேசும் நடிகைகள் பலர் தங்களுக்கு இதுவரை அப்படிப்பட்ட அனுபவம் ஏற்படவில்லை என்றும் கூறி மழுப்பிவிடுகிறார்கள்.

 

ஆனால், ஒரு சில நடிகைகள் மட்டும் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இயக்குநர் மற்றும் நடிகர்கள் குறித்து மறைமுகமாக கூறுகிறார்கள்.

 

இந்த நிலையில், மலையாள டிவி சீரியல் இயக்குநர் உன்னி கிருஷ்ணன், தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக அந்த சீரியலில் நடிக்கும் பிரபல டிவி நடிகை நிஷா சாரங் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

 

மலையாள டிவியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகும் சீரியல் ‘உப்பும் மொளகும்’. 650 எபிசோட்களை கடந்திருக்கும் இந்த சீரியலில் 5 குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருபவர் நிஷா சாரங். இவர் சீரியல் இயக்குநர் உன்னி கிருஷ்ணன் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், “உன்னி கிருஷ்ணன் நெடுங்காலமாகவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரின் செயல்கள் பிடிக்கவில்லை என்பதை நான் தெரிவித்தும் அவர் என்னை விடுவதாக இல்லை.

 

தான் எதிர்ப்பார்த்தது கிடைக்காது என்பது தெரிந்ததும், உன்னி என்னை செட்டில் அசிங்கமாக திட்ட தொடங்கினார். செட்டில் மட்டும் அல்லாமல் போனிலும் அசிங்கமாக மெசஜ் அனுப்புகிறார். அவரது தொல்லை தாங்காமல் நான் பலமுறை அழுதுள்ளேன். அவரது செயல் குறித்து சக நடிகர்களும் அவரை பல முறை எச்சரித்துள்ளனர். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத அவர் தொடர்ந்து என்னை டார்ச்சர் செய்து வந்தார்.

 

செட்டுக்கு தினமும் குடித்துவிட்டு வருபவர் என்னிடம் அசிங்கமாக நடக்கவும் அவ்வபோது முயற்சி செய்து வந்தார்.

 

நடிப்பு தான் என் தொழில், இதில் கிடக்கும் வருமானத்தில் தான் என் குடும்பம் நடக்கிறது. என் மகளின் திருமணத்திற்காக அனிஅத்து அவமானங்களையும் பொறுத்துக் கொண்டு அந்த சீரியலில் நடித்து வந்தேன். ஆனால், பொய்யான குற்றம் சாட்டி என்னை அந்த சீரியலில் இருந்து உன்னி நீக்கிவிட்டார். அந்த தொடரில் இருந்து உன்னியை நீக்கினால் தான் நான் மறுபடியும் அந்த தொடரில் நடிப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

2997

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவி! - ரூ.1 லட்சம் வழங்கிய பிடி செல்வகுமார்!
Thursday December-11 2025

சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...

Recent Gallery