மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பது உறுதியான நிலையில், அப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.
’அதிரடி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், தலைப்பு குறித்து அறிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு, இன்று (ஜூலை 10) 11 மணிக்கு தலைப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் தலைப்பு ‘மாநாடு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்டிஆர்-ன் ‘மாநாடு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் சப் டைடிலாக ‘இது வெங்கட் பிரபு அரசியல்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் ஹீரோயின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன்...
காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, ’அங்காடித்தெரு’ மகேஷ், ’திருக்குறள்’ குணாபாபு நடிப்பில், 1990-களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தடை அதை உடை’...
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'...