மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பது உறுதியான நிலையில், அப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.
’அதிரடி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், தலைப்பு குறித்து அறிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு, இன்று (ஜூலை 10) 11 மணிக்கு தலைப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் தலைப்பு ‘மாநாடு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்டிஆர்-ன் ‘மாநாடு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் சப் டைடிலாக ‘இது வெங்கட் பிரபு அரசியல்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் ஹீரோயின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...