‘செக்க சிவந்த வானம்’ படத்தை முடித்த கையோடு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ரெடியாகியுள்ள சிம்புவின் புதிய படத்திற்கு ‘மாநாடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் படமாக உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒருவரை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
முதலில் கீர்த்தி சுரேஷை ஜோடியாக்க நினைத்த படக்குழு பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை ஹீரோயினாக்க முடிவு செய்து அதற்கான போனி கபூரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்களாம். சம்பளமும் பெரிய அளவில் கொடுப்பதற்கு தயாராக இருந்தார்களாம்.
ஆனால், ஜான்வியின் தந்தை போனி கபூர் நோ சொன்னதோடு, தற்போது தனது மகள் பாலிவுட் படங்களில் மட்டுமே நடிப்பார், அப்படியே பிற மொழிகளில் நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பார், என்று கராராக கூறிவிட்டாராம்.
இதனால், சிம்புவுக்கு கோலிவுட் ஹீரோயின் ஒருவரை தான் ‘மாநாடு’ ஜோடியாக்க போகிறது என்று கூறப்படுகிறது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...