‘செக்க சிவந்த வானம்’ படத்தை முடித்த கையோடு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ரெடியாகியுள்ள சிம்புவின் புதிய படத்திற்கு ‘மாநாடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் படமாக உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒருவரை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
முதலில் கீர்த்தி சுரேஷை ஜோடியாக்க நினைத்த படக்குழு பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை ஹீரோயினாக்க முடிவு செய்து அதற்கான போனி கபூரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்களாம். சம்பளமும் பெரிய அளவில் கொடுப்பதற்கு தயாராக இருந்தார்களாம்.
ஆனால், ஜான்வியின் தந்தை போனி கபூர் நோ சொன்னதோடு, தற்போது தனது மகள் பாலிவுட் படங்களில் மட்டுமே நடிப்பார், அப்படியே பிற மொழிகளில் நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பார், என்று கராராக கூறிவிட்டாராம்.

இதனால், சிம்புவுக்கு கோலிவுட் ஹீரோயின் ஒருவரை தான் ‘மாநாடு’ ஜோடியாக்க போகிறது என்று கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...