நடிகை நயந்தாரா தனது ஒவ்வொரு படமும் ஹிட் ஆகும்போதும், தனது சம்பளத்தை உயர்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாரா, ஹீரோக்களுக்கு ஜோடி என்றால் ரூ.4 கோடி வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நயந்தாராவின் வழியை தற்போது காஜல் அகர்வாலும் பின்பற்ற தொடங்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உள்ள காஜல் அகர்வால், ‘விவேகம்’ மற்றும் ‘மெர்சல்’ படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் பெரிய ஹீரோக்கள் படங்கள் என்பதால், இப்படங்கள் ரிலீஸிற்கு பிறகு, காஜல் அகர்வாலின் தமிழ் மார்கெட் ராக்கெட் வேகத்தில் உயரும் என்று கருதப்படுகிறது.
மேலும், இரண்டு படங்களும் நிச்சயம் வெற்றி பெற்று வியாபார ரீதியாகவும் நல்ல வசூலை பெறும் என்று கருதப்படுவதால், காஜல் அகர்வால் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்கும் காஜல் அகர்வால், தற்போது தனது சம்பளத்தை ரூ.2 கோடி வரை உயர்த்தியுள்ளாராம். மேலும், தனது ஒவ்வொரு படங்களின் வெற்றியை வைத்து தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...