வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு ‘மாநாடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்றி அறிவிக்கப்பட்ட இந்த தலைப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, அரசியலிலும் சற்று பரபரப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு விரைவில் அரசியலில் இறங்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இந்த தலைப்பு அமைந்திருக்கிறது.
இந்த நிலையில், பல விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுத்து வரும் சிம்பு, கடந்த சில நாட்களாக ‘சர்கார்’ படத்திற்கு எதிராக பேசி வரும் அன்புமணி ராமதாஸுக்கு சவால் விடுக்கும் விதத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருப்பது கோடம்பாக்கத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் புகைப்பதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் வெளியான விஜயின் ‘சர்கார்’ படத்தையும் கடுமையாக விமர்சித்தார்கள்.
இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் சிம்பு, ”திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் புகைப்பது குறித்து அன்புமணி அவர்கள் சினிமா நடிகர்களுடன் பொது மேடையில் பேச ரெடி என்றார், நானும் தற்போது ரெடி, அவருடன் இது குறித்து ஒரு பொது மேடையில் பேச விரும்புகின்றேன்.” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
’மெர்சல்’ படத்தின் மூலம் மிகப்பெரிய சர்ச்சையை எதிர்கொண்ட நடிகர் விஜயே, பா.ம.க தலைவர்களின் எதிர்ப்புக்கு பணிந்து போன நிலையில், அவர்களை நேரடியாக எதிர்க்கும் விதத்தில் சிம்பு சவால் விட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...