Latest News :

ரகுவரன் இடத்தை நிரப்ப வேண்டும் - வளர்ந்து வரும் நடிகரின் ஆசை
Tuesday July-10 2018

தமிழ் சினிமாவில் தமிழ் தெரியாத பலர் வில்லனாக நடித்துக் கொண்டிருக்க, தமிழ் தெரிந்த வில்லனாக ஜெயித்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் ஒருவர் தான் மதுராஜ்.

 

மெடிக்கல் துறையில் பிசியாக இருந்த இவரை, இவரது நண்பரான இயக்குநர் வி.இசட்.துரை, ‘நேபாளி’ படத்தில் லைன் புரொடியுசராக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் கிடைத்த நட்பின் காரணமாக நட்டிகுமார் இயக்கிய ‘எவனவன்’ படத்தில் துப்பறியும் போலீஸ் வேடத்தில் நடித்தார். பிறகு விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ படத்திலும் நடித்தார்.

 

தற்போது அங்காடி தெரு மகேஷ் நடிப்பில் விஜய்மோகன் இயக்கும் ஒரு படத்தில் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், போலீஸ் இன்வஸ்டிகேசன் ஆபிசர் என மூன்று பரிமாணத்தில், மூன்று காலகட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சித்தார்த் நடிக்க உள்ள ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பவர், ரம்மி பட இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘கதாயுதம்’ படத்தில் லீடிங் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து வருகிறார்.

 

இப்படி பல முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வரும் மதுராஜ், ரகுவரன் மாதிரி எந்த வேடம் கொடுத்தாலும் அப்படியே பொருந்திப் போகிறார், என்ற பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் தனது ஆசை என்று கூறுகிறார்.

Related News

3004

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவி! - ரூ.1 லட்சம் வழங்கிய பிடி செல்வகுமார்!
Thursday December-11 2025

சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...

Recent Gallery