படப்பிடிப்புக்காக டார்ஜிலிங் சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று முன் தினம் சென்னை திரும்பிய நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற கல்வி நிறுவன அதிபர் ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதற்கான பாராட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதைவிட அவரின் தலை அலங்காரம் தன்னை மிகவும் கவர்ந்தது. தானும் அவரை போல முடியை வைத்திருக்கலாம் என்று தோன்றும்.
பரமஹம்சர் காசிக்கு போக ஆசைப்பட்டு, சேர்த்து வைத்த பணத்தை கொண்டு போகும் வழியில், மக்கள் பட்ட கஷ்ட்டத்தை கண்டு எல்லோருக்கும் உணவளித்து விட்டு அவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை கண்டு இவர்கள் வாயிலாக இறைவனை தரிசித்து விட்டதாக கூறி சென்றுவிட்டார்.
உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் உழைத்தாலும் கடவுளின் அருளும் நல்ல மனமும் இருந்தால் தான் முன்னேற முடியும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும்.” என்றார்.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...