படப்பிடிப்புக்காக டார்ஜிலிங் சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று முன் தினம் சென்னை திரும்பிய நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற கல்வி நிறுவன அதிபர் ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதற்கான பாராட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதைவிட அவரின் தலை அலங்காரம் தன்னை மிகவும் கவர்ந்தது. தானும் அவரை போல முடியை வைத்திருக்கலாம் என்று தோன்றும்.
பரமஹம்சர் காசிக்கு போக ஆசைப்பட்டு, சேர்த்து வைத்த பணத்தை கொண்டு போகும் வழியில், மக்கள் பட்ட கஷ்ட்டத்தை கண்டு எல்லோருக்கும் உணவளித்து விட்டு அவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை கண்டு இவர்கள் வாயிலாக இறைவனை தரிசித்து விட்டதாக கூறி சென்றுவிட்டார்.
உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் உழைத்தாலும் கடவுளின் அருளும் நல்ல மனமும் இருந்தால் தான் முன்னேற முடியும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும்.” என்றார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...