Latest News :

தமிழ் சீரியல் நடிகைக்கு விபச்சார அழைப்பு - இரண்டு பேர் கைது
Friday July-13 2018

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் இருக்கும் நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் விபச்சார வழக்கில் சிக்கி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பிரபல தமிழ் சீரியலான ‘வாணி ராணி’ யில் நடிக்கும் நடிகை ஒருவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

 

இந்த நிலையில், மற்றொரு தமிழ் சீரியல் நடிகை ஒருவருக்கு விபச்சார தொல்லை கொடுத்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

பல சீரியல்களில் நடித்து வரும் நடிகை ஜெயலட்சுமி, போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனக்கு வாட்ஸ் அப் மூலம் ரிலேஷின்ஷிப் மற்றும் டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் இரண்டு முறை மெசஜ் வந்ததாகவும், அதில் ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றும், விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.

 

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

 

நடிகைகள் சிலரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவர்களது செல்போன் மற்றும் புகைப்படங்களை எடுக்கும் கும்பல் ஒன்று, வாட்ஸ் அப் மூலம் இதுபோன்ற மெசஜ்களை தனிதனியாக அனுப்பி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

3014

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery