Latest News :

தமிழ் சீரியல் நடிகைக்கு விபச்சார அழைப்பு - இரண்டு பேர் கைது
Friday July-13 2018

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் இருக்கும் நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் விபச்சார வழக்கில் சிக்கி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பிரபல தமிழ் சீரியலான ‘வாணி ராணி’ யில் நடிக்கும் நடிகை ஒருவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

 

இந்த நிலையில், மற்றொரு தமிழ் சீரியல் நடிகை ஒருவருக்கு விபச்சார தொல்லை கொடுத்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

பல சீரியல்களில் நடித்து வரும் நடிகை ஜெயலட்சுமி, போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனக்கு வாட்ஸ் அப் மூலம் ரிலேஷின்ஷிப் மற்றும் டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் இரண்டு முறை மெசஜ் வந்ததாகவும், அதில் ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றும், விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.

 

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

 

நடிகைகள் சிலரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவர்களது செல்போன் மற்றும் புகைப்படங்களை எடுக்கும் கும்பல் ஒன்று, வாட்ஸ் அப் மூலம் இதுபோன்ற மெசஜ்களை தனிதனியாக அனுப்பி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

3014

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவி! - ரூ.1 லட்சம் வழங்கிய பிடி செல்வகுமார்!
Thursday December-11 2025

சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...

Recent Gallery