மும்பை, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வருபவர்கள், தமிழகத்தின் கனவு கண்ணியாக பல ஆண்டுகள் வலம் வருவதோடு, தமிழகத்திலேயே வீடு, பங்களா, சொத்து என செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துவிட்டு பிறகு வாய்ப்பு இல்லாததால் தங்களது சொந்த ஊருக்கே மூட்டையை கட்டிவிடுகிறார்கள்.
அந்த வகையில், முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ஹன்சிகா, தற்போது தனது சொந்த ஊரான மும்பைக்கு மூட்டையை கட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட ஹன்சிகா, சிம்பு உடனான காதல் விவகாரத்தால் பட வாய்ப்புகளை இழந்துவிட்டார். பிறகு காதல் முறிவு ஏற்பட்டு மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டினாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே சமயம், அவர் நடித்த படங்களும் சரியாக ஓடவில்லை.மேலும், அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்கள் அறிமுக நடிகைக்கான சம்பளத்தை கொடுப்பதால், வெறுத்துப் போன ஹன்சிகா, தற்போது தமிழ் சினிமாவை விட்டே போக முடிவு செய்துவிட்டாராம்.

தமிழகத்தில் ஓட்டலில் தங்கியிருக்கும் அவர், பட வாய்ப்புகள் இல்லாததால் ஓட்டல் வாடகை கொடுக்க முடியாமல் சற்று சிரமப்படுவதாகவும், அதனால் தனது சொந்த வீடு இருக்கும் மும்பைக்கே சென்றுவிடவும் முடிவு செய்துவிட்டதாக கோடம்பாக்க டீக்கடைகளில் பேசப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...