மும்பை, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வருபவர்கள், தமிழகத்தின் கனவு கண்ணியாக பல ஆண்டுகள் வலம் வருவதோடு, தமிழகத்திலேயே வீடு, பங்களா, சொத்து என செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துவிட்டு பிறகு வாய்ப்பு இல்லாததால் தங்களது சொந்த ஊருக்கே மூட்டையை கட்டிவிடுகிறார்கள்.
அந்த வகையில், முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ஹன்சிகா, தற்போது தனது சொந்த ஊரான மும்பைக்கு மூட்டையை கட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட ஹன்சிகா, சிம்பு உடனான காதல் விவகாரத்தால் பட வாய்ப்புகளை இழந்துவிட்டார். பிறகு காதல் முறிவு ஏற்பட்டு மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டினாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே சமயம், அவர் நடித்த படங்களும் சரியாக ஓடவில்லை.மேலும், அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்கள் அறிமுக நடிகைக்கான சம்பளத்தை கொடுப்பதால், வெறுத்துப் போன ஹன்சிகா, தற்போது தமிழ் சினிமாவை விட்டே போக முடிவு செய்துவிட்டாராம்.
தமிழகத்தில் ஓட்டலில் தங்கியிருக்கும் அவர், பட வாய்ப்புகள் இல்லாததால் ஓட்டல் வாடகை கொடுக்க முடியாமல் சற்று சிரமப்படுவதாகவும், அதனால் தனது சொந்த வீடு இருக்கும் மும்பைக்கே சென்றுவிடவும் முடிவு செய்துவிட்டதாக கோடம்பாக்க டீக்கடைகளில் பேசப்படுகிறது.
ரிலாக்ரோ புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் ‘ஹிட்டன் கேமரா’ (HIDDEN CAMERA) அருண்ராஜ் பூத்தனல் இயக்கும் இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கிறார்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...