Latest News :

எம்.ஜி.ஆரைப் பார்த்து வளர்ந்தவன் நான் - பிரபு தேவா பேச்சு
Monday July-16 2018

உலக எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் முதல் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கிய இவ்விழாவினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

 

காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் அறங்கேறிய இந்த மாநாட்டில், மாலை 7 மணியளவில் அமிமேஷனில் உருவாகும் எம்.ஜி.ஆர்-ன் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் ஒரு பாடல் மற்றும் டீசல் வெளீயீடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

இதில் நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா, இயக்குநர் விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு இசை குறுந்தகடை வெளியிட, உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிகள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களான முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஐசரி கணேசன், ஏ.சி.சண்முகம் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

 

Prabhudeva and Isari Ganesh

 

இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்குவதோடு அனிமேஷன் பணிகளையும் மேற்கொள்ளும் அருள்மூர்த்தி நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்த படம் உருவாக மிக முக்கிய காரணம் இரண்டு பேர் தான். ஒன்று எம்ஜிஆர், அவர் தான் இப்படி ஒரு சிறப்பான தலைப்பை கொடுத்தவர். இன்னொருவர் எங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேஷ். அவர் கொடுத்த முழு சுதந்திரம் தான் இந்த படம் இந்த அளவுக்கு வர காரணம். எந்த தலையீடும் இல்லாமல் அவர் அளித்த சுதந்திரமும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானது. வைரமுத்து சாரின் வரிகளும், இமானின் இசையும் படத்துக்கு பெரிய பலம். படம் மிக சிறப்பாக வரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

 

இயக்குநர் விஜய் பேசுகையில், “இங்கு வந்திருக்கிற எல்லோருமே எம்ஜிஆர் ரசிகர்கள் தான். அவர் மீது உள்ள அன்பு, மரியாதை தான் இதற்கு முக்கிய காரணம். ட்ரைலர் பார்த்தேன், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. வைரமுத்து சார் பாடல்கள் எழுதியிருக்கிறார், அதை பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. புரட்சிதலைவருக்கான வரிகளை மிக அற்புதமாக எழுதியிருக்கிறார்.” என்றார்.

 

பிரபு தேவா பேசும் போது, “எம்.ஜி.ஆர்-ன் ஸ்டைல், அவருடைய டிரெஸ்ஸிங் எனக்கு மிகவும் பிடிக்கும். மைலாப்பூரில் நாங்கள் வசிக்கும் போது காமதேனு தியேட்டரில் அன் அம்மாவுடன் எம்.ஜி.ஆர் படத்தை பார்த்திருக்கிறேன். வாரம் வாரம் எம்ஜிஆர் படத்தை பார்த்துவிடுவேன். சொல்ல போனால், அவரது படத்தை பார்த்து வளர்ந்தவன் நான். எனது அப்பா அவருடன் நான்கு படங்களில் பணியாற்றியிருக்கிறார். கல்லூரி நேரத்தில் அவர் காரில் எங்களை கடந்து போனது தூரத்தில் இருந்து அவரை நான் பார்த்திருக்கிறேன். பிங்க் கலர்ல இருந்த அவரது முகம் இன்னமும் எனது நினைவில் இருக்கிறது.” என்றார்.

 

விழாவில் கொல்லங்குடி கருப்பாயி பாடல் பாடிய இசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. 

Related News

3031

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery