கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியான பிக் பாஸ் இரண்டாம் சீசனில், தற்போது எலிமினெட் ரவுண்ட் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், நேற்று தாடி பாலாஜியின் மனைவி நித்யா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் தாடி பாலாஜி மற்றும் நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவர்களுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அவர்கள் ஒன்றாக சேர்ந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அப்படி ஏதும் இல்லை இன்னும் பிரச்சினை அப்படியே தான் இருக்கிறது, என்று நித்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்த நித்யா, “ஆறு ஏழு வருஷமாக கஷ்டத்தை அனுபவித்த நான் எப்படி ஒரே மாதத்தில் மாறிவிடுவேன். போஷிகா பேசியது அவளாக பேசியது இல்லை.. அவளை அப்படி பேசவைத்துள்ளார்கள் பிக்பாஸ் டீம். நான் பேசியதை கூட எடிட் செய்துவிட்டார்கள். மொத்ததில் பிக் பாஸ் வீட்டில் தனது குடும்ப வாழ்க்கை மற்றும் தனது குழந்தை பேசியதாக காட்டியது அனைத்தும் பொய்யான விஷயங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தாடி பாலாஜியிடம், ”நீ உள்ளே இருக்கிறதுதான் எனக்கும் நல்லது. போய் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற வேலைகளை முடிச்சிடுறேன்!” என்று கூறிவிட்டு தான் நித்யா வந்ததாகவும் கூறப்படுகிறது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...