Latest News :

பிக் பாஸில் காட்டியது எல்லாமே பொய்! - பகீர் தகவலை வெளியிட்ட போட்டியாளர்
Monday July-16 2018

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியான பிக் பாஸ் இரண்டாம் சீசனில், தற்போது எலிமினெட் ரவுண்ட் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில், நேற்று தாடி பாலாஜியின் மனைவி நித்யா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் தாடி பாலாஜி மற்றும் நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவர்களுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அவர்கள் ஒன்றாக சேர்ந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், அப்படி ஏதும் இல்லை இன்னும் பிரச்சினை அப்படியே தான் இருக்கிறது, என்று நித்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

Nithya

 

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்த நித்யா, “ஆறு ஏழு வருஷமாக கஷ்டத்தை அனுபவித்த நான் எப்படி ஒரே மாதத்தில் மாறிவிடுவேன். போஷிகா பேசியது அவளாக பேசியது இல்லை.. அவளை அப்படி பேசவைத்துள்ளார்கள் பிக்பாஸ் டீம். நான் பேசியதை கூட எடிட் செய்துவிட்டார்கள். மொத்ததில் பிக் பாஸ் வீட்டில் தனது குடும்ப வாழ்க்கை மற்றும் தனது குழந்தை பேசியதாக காட்டியது அனைத்தும் பொய்யான விஷயங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், தாடி பாலாஜியிடம், ”நீ உள்ளே இருக்கிறதுதான் எனக்கும் நல்லது. போய் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற வேலைகளை முடிச்சிடுறேன்!” என்று கூறிவிட்டு தான் நித்யா வந்ததாகவும் கூறப்படுகிறது.

Related News

3037

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery