தமிழகத்தில் உருவாகும் புழல் ஆந்திராவில் மையம் கொண்டு கரையை கடப்பது தான் வழக்கம். ஆனால், நடிகை ஸ்ரீரெட்டியின் விஷயத்தில், ஆந்திராவில் மையம் கொண்ட புழல் தற்போது தமிழகத்தில் மையம் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு நடிகர், ஒரு இயக்குநர் என்று செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
இந்த நிலையில், இன்று அவர் நடிகைகள் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்று அவரது பதிவுகள் வைரலாகும் நிலையில், அவர் இன்று முன்னணி நடிகைகள் குறித்து பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால், தற்போது நடிகைகள் ஏரியாவிலும் பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கும் பதிவில், நிறைய பேர் எனக்கு மட்டும் தான் இதுபோல் தவறான விஷயங்கள் அதிகம் நடந்துள்ளது என்று நினைக்கிறார்கள், ஆனால் என்னுடையது மிகவும் சிறியது.
நயந்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகள் வெளியே சொல்ல ஆரம்பித்தால் அதிகம் தெரியும், என்று தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...