தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஊடகத்துறையில் கால் பதித்த சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளராக உயர்ந்து பிறகு வெள்ளித்திரையில் ஹீரோவாக உருவெடுத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.
‘மெரீனா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், தனது காமெடி திறமையால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர், தற்போது அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு இருக்க கூடிய ஓபனிங்கோடு வசூல் மன்னனாக வலம் வருகிறார்.
இதற்கிடையே, சொந்தமாக திரைப்படங்களை தயாரிப்பதில் ஈடுபட்டு உள்ளவர், தற்போது பாடலாசிரியராகவும் உயர்ந்துள்ளார். நயந்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் எழுதிய “கல்யாண வயசு...” பெரிய ஹிட் ஆகியுள்ளது.
இந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்திற்கு பாடல் எழுதியதற்காக சிவகார்த்திகேயன் பெற்ற சம்பள தொகையை மறைந்த பிரபல பாடலாசிரிய நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான ‘மெரீனா’ திரைப்படத்தில் நா.முத்துக்குமார் மூன்று பாடல்கள் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...