Latest News :

நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு உதவிய சிவகார்த்திகேயன்!
Tuesday July-17 2018

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஊடகத்துறையில் கால் பதித்த சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளராக உயர்ந்து பிறகு வெள்ளித்திரையில் ஹீரோவாக உருவெடுத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.

 

‘மெரீனா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், தனது காமெடி திறமையால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர், தற்போது அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு இருக்க கூடிய ஓபனிங்கோடு வசூல் மன்னனாக வலம் வருகிறார்.

 

இதற்கிடையே, சொந்தமாக திரைப்படங்களை தயாரிப்பதில் ஈடுபட்டு உள்ளவர், தற்போது பாடலாசிரியராகவும் உயர்ந்துள்ளார். நயந்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் எழுதிய “கல்யாண வயசு...” பெரிய ஹிட் ஆகியுள்ளது.

 

இந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்திற்கு பாடல் எழுதியதற்காக சிவகார்த்திகேயன் பெற்ற சம்பள தொகையை மறைந்த பிரபல பாடலாசிரிய நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

 

Marina

 

சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான ‘மெரீனா’ திரைப்படத்தில் நா.முத்துக்குமார் மூன்று பாடல்கள் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

3049

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery