‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது வாங்கிய பிரியா மணி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வந்தார். பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இதற்கிடையே, பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, தொழிலதிபர் முஸ்தபா ராஜு என்பவருடன் பிரியா மணிக்கு நட்பு மலர்ந்தது. நாளடைவில் நட்பு காதலாக மாறி, நீண்ட ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக சுற்றி திரிந்தவர்கள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரது திருமணம் நிச்சயதார்த்தம் மூன்று மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற நிலையில், பிரியா மணி - முஸ்தபா ராஜ் திருமணம் நாளை (ஆக.23) பெங்களூரில் நடைபெற உள்ளது. திருமணத்தை பதிவு செய்ய உள்ளார்கள். பிறகு 24 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ள பிரியா மணி, இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துக் கொள்வதோடு, புது படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது...
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது...
After more than a decade of reshaping Indian film music with award-winning background scores, chart-topping albums, and viral anthems, renowned composer and performer Anirudh Ravichander has announced the launch of Albuquerque Records, an artist-owned music label that marks a defining new chapter in his creative journey...