Latest News :

நடிகை பிரியா மணிக்கு நாளை திருமணம்!
Tuesday August-22 2017

‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது வாங்கிய பிரியா மணி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வந்தார். பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

 

இதற்கிடையே, பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, தொழிலதிபர் முஸ்தபா ராஜு என்பவருடன் பிரியா மணிக்கு நட்பு மலர்ந்தது. நாளடைவில் நட்பு காதலாக மாறி, நீண்ட ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக சுற்றி திரிந்தவர்கள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரது திருமணம் நிச்சயதார்த்தம் மூன்று மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற நிலையில், பிரியா மணி - முஸ்தபா ராஜ் திருமணம் நாளை (ஆக.23) பெங்களூரில் நடைபெற உள்ளது. திருமணத்தை பதிவு செய்ய உள்ளார்கள். பிறகு 24 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொள்கிறார்கள்.

 

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ள பிரியா மணி, இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துக் கொள்வதோடு, புது படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

Related News

305

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery