‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது வாங்கிய பிரியா மணி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வந்தார். பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இதற்கிடையே, பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, தொழிலதிபர் முஸ்தபா ராஜு என்பவருடன் பிரியா மணிக்கு நட்பு மலர்ந்தது. நாளடைவில் நட்பு காதலாக மாறி, நீண்ட ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக சுற்றி திரிந்தவர்கள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரது திருமணம் நிச்சயதார்த்தம் மூன்று மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற நிலையில், பிரியா மணி - முஸ்தபா ராஜ் திருமணம் நாளை (ஆக.23) பெங்களூரில் நடைபெற உள்ளது. திருமணத்தை பதிவு செய்ய உள்ளார்கள். பிறகு 24 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ள பிரியா மணி, இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துக் கொள்வதோடு, புது படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...