கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் இரண்டில், தாடி பாலாமி மற்றும் அவரது மனைவி நித்யா இருவருக்கும் இடையிலான உறவு தான் நிகழ்ச்சியை பரபரப்பாக நகர்த்தி சென்ற நிலையில், தற்போது நித்யா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தாலும், நித்யா அளித்து வரும் பேட்டியில் பிக் பாஸ் பரபரப்பாகிக் கொண்டு தான் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாவும், தாடி பாலாஜியும் மீண்டும் இணைந்தது போல் காட்டியது எல்லாமே பொய், என்று நித்யா கூறியது முதல் அதிர்ச்சியாக இருந்த நிலையில், அடுத்தடுத்த அதிர்ச்சியாக பல விஷயங்களை கூறி வருகிறார்.
இந்த நிலையில், பாலாஜியுடன் தான் ஒரு போதும் சேர மாட்டேன், நிச்சயம் அவரிடம் இருந்து விவாகரத்து பெறுவேன், என்று கூறியிருக்கும் நித்யா, மற்றொரு பேட்டியில், ”ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய பர்சனல் ஸ்பேஸ் கொடுத்து, பெண் என்பதை விட ஒரு அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய பர்சனல் ஸ்பேஸ் கொடுத்தாலே நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்துவிடுவோம்” என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...