விஜயின் ‘பைரவா’ படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக சிறு வேடத்தில் நடித்த அபர்ணா வினோத், பரத் நடிக்கும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
மேடை நாடகத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய அபர்ணா, மலையாளத்தில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவரது நடிப்பு திறமை என்பது மிகவும் அப்பாரமானதாகும். அதனை நிரூபிக்கும் வகையில் அவருக்கு இன்னும் பெயரிடப்பாத பரத்தில் ஹீரோயின் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
இது குறித்து கூறிய அபர்ணா வினோத், “நாடக கலைஞராக இருப்பதால், அது என் நடிப்பிற்கான சில துல்லியமான மாற்றங்களை பெற உதவியது. அது தான் 'ஞான் நின்னோடு', 'கோஹினூர்' போன்ற படங்களின் மூலம் எனக்கு நல்ல மைலேஜ் பெற உதவியது என்று உறுதியாக நம்புகிறேன்
இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எனது இரண்டு மலையாள திரைப்படங்களையும் பார்த்து, இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியான நீதியைச் செய்வேன் என்று உணர்ந்தனர். இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன். எனக்கு 22 வயது. தாய், ஆசிரியராக நடிப்பது மிக சவாலானது. இது என்னுடைய ஜோனுக்கு அப்பால் இருக்கிறது. ஆனால் என் கதாபாத்திரம் கேட்கும் விஷயங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன்.” என்றார்.
’இனிது இனிது’, ‘சார்லஸ் ஷாஃபிக் கார்த்திகா’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ஷரண், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தரண் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் கொடைக்கானலில் தொடங்க இருக்கிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...