சினிமாவைப் போலவே தொலைக்காட்சி தொடர்களும் அதிகமான பொருட்ச் செலவோடு பிரம்மாண்டமாக தயாரிக்கப்படுவதோடு, காதல், ஆக்ஷன் என்று சினிமா பாணியில் எடுப்பதோடு, சில சர்ச்சையான விஷயங்களையும் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான ‘செம்பருத்தி’ சீரியலுக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சீரியலின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் இந்து கடவுளான ராமர் மற்றும் சீதை ஒன்றாக இருக்கும் சிலையை கீழே போட்டு உடைப்பது போல காட்டப்படுகிறது. இந்த காட்சி இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருந்ததாக கூறி, வழக்கறிஞர் ஈஷ்வரமூர்த்தி என்பவர், திருப்பூர் போலீசில் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...