Latest News :

பிரியங்காவின் கணவர் மீது போலீசில் புகார்! - பிரேத பரிசோதனைக்கு குடும்பத்தார் தடை
Thursday July-19 2018

’வம்சம்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா, நேற்று முன் தினம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது மரணம் தொலைக்காட்சி ஏறியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதற்கிடையே, பிரியங்கா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாகவும், இருவரும் கடந்த மூன்று மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், குழந்தை இல்லாத காரணத்தால் தான் பிரியங்கா தற்கொலை செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

 

பிரியங்காவுக்கு உறவினர்கள் என்று சென்னையில் யாரும் இல்லை, அனைவரும் மதுரையில் தான் இருக்கிறார்கள். அதனால் அவரது உறவினர்கள் யாராவது கையெழுத்து போட்டால் தான் பிரதே பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். நேற்று வரை அவரது உறவினர்கள் யாரும் வராததால் பிரதே பரிசோதனை நடைபெறவில்லை.  இதையடுத்து நேற்று மாலை பிரியங்கா உறவினர்கள் மதுரையில் இருந்து வந்ததால், இன்று காலை 11 மணிக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

 

Priyanka

 

இந்த நிலையில், பிரியங்காவின் கணவர் அருண் மீது போலீசில் புகார் அளிக்க பிரியங்காவின் குடும்பத்தார் முடிவு செய்திருப்பதால், பிரதே பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கூறி வருகிறார்களாம். இதனால், இன்னும் பிரியங்காவில் உடல் பிரேத பரிசோதனை செய்யாமல், சென்னை ராயபேட்டை மருத்துவமனையில் தான் இருக்கிறது.

 

அதே சமயம், பிரியங்காவுடன் சீரியலில் ஒன்றாக நடித்த நடிகைகள் சிலர், அவரது கணவர் அருண் நல்லவர் அவருக்கும் பிரியங்காவின் தற்கொலைக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது, பிரியங்கா ஏதோ ஒரு கோபத்தில் இப்படி செய்துக் கொண்டார், என்று அவரது உறவினர்களிடம் சமரசம் பேசியிருக்கிறார்களாம்.

 

அதனால், இன்று எப்படியும் பிரியங்காவின் உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு வரும் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது. மேலும், பிரியங்காவின் உடல் மருதுரைக்கு எடுத்துச் செல்லப்படாமல் சென்னையில் வைத்தே அவரது உறுதிச்  சடங்கை செய்யவும் முடிவு செய்துள்ளார்களாம்.

 

Priyanka

 

மொத்தத்தில், பிரியங்காவின் உடலை பெற்று அவருக்கு முறையாக இறுதிச் சடங்கு செய்வதில் அவரது உறவினர்கள் மும்முரம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

Related News

3063

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery